ராணுவ வாகனத்திற்கு வழிவிடாத அரசு பேருந்து ஓட்டுநர் - துப்பாக்கி காட்டி மிரட்டிய ராணுவ அதிகாரியால் பரபரப்பு!

ஓசூர் - பெங்களூரு நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி அருகே ராணுவ தளவாடங்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனத்திற்கு வழிவிடாத அரசு பேருந்து ஓட்டுநரை, சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி ஒருவர் கன்னத்தில் அறைந்து, துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.



கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராணுவ தளவாடங்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு வழிவிடாத அரசு பேருந்து ஓட்டுனரை சி.ஐ.எஸ்.எஃப்அதிகாரி அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் இருந்து ராணுவ தளவாடங்களை ஏற்றிக்கொண்டு ராணுவ வாகனம் ஒன்று சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் துணையுடன் பெங்களூரு நோக்கி சென்றது.

இந்நிலையில், வாகனம் ஓசூர் - பெங்களூரு நெடுஞ்சாலையில் சென்ற நிலையில், குருபரப்பள்ளி அருகே முன்னால் சென்ற அரசு பேருந்து ராணுவ வாகனத்திற்கு வழிவிடவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், ராணுவ தளவாட வாகனத்திற்கு வழிவிடாததால் கண்டிக்கும் விதமாக அரசு பேருந்தை வழிமறித்த எஸ்.ஐ., பிரதாப் ஓட்டுநரை கன்னத்தில்சரமாரியாக அறைந்துள்ளார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.



இதனிடையே, அரசு பேருந்து ஓட்டுநருக்கு ஆதரவாக பொதுமக்கள், காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. அப்போது, சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களில் ஒருவர் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டினார்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பின்னால் வந்தது ராணுவ வாகனம் என்பது, ஓட்டுநருக்கு தெரியாது என காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஓட்டுநரிடம் எஸ்.ஐ. பிரதாப் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கியை காட்டி மிரட்டியது குறித்த கேட்டதற்கு, மிக முக்கியமான ராணுவ தளவாடம் வாகனத்தில் இருப்பதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக அவ்வாறு எதிர்வினை ஆற்றப்பட்டதாக சி.ஐ.எஸ்.எஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இருதரப்பினரும் சமாதானமாக சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...