உடுமலையில் பனிப்பொழிவால் தக்காளி விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் தக்காளி விலை 14 கிலோ கொண்ட பெட்டி 350 ரூபாயில் இருந்து 160 ரூபாயாக சரிவு. இந்த விலை வீழ்ச்சியால் போக்குவரத்து செலவுக்குக்கூட கட்டுபடியாகாத நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை.


கோவை: உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏறத்தாழ, 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி தற்போது சாகுபடிசெய்யப்பட்டுள்த. இங்கு விளையும் தக்காளியை, விவசாயிகள் உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை வருகின்றனர்.



உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வரும் வியாபாரிகள், தக்காளியை கொள்முதல் செய்துவருகின்றனர். கடந்த சில வாரமாக, உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், வியாபாரிகள் வருகை குறைந்ததால், விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

கடந்த மாதம், 14 கிலோ கொண்ட பெட்டி, 350 ரூபாய் வரை விற்ற நிலையில், தற்போது ரகத்திற்கு ஏற்ப, 160 முதல், 200 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. தொடர் பனிப்பொழிவு காரணமாக தக்காளிச் செடி மற்றும் காய்கள் பாதித்து மகசூல் குறைந்துள்ள நிலையில், தொடர் விலை சரிவால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளி சாகுபடிக்கு, ஏக்கருக்கு, ஆயிரம் 40 வரை ரூபாய் செலவாகிறது. நோய் தாக்குதல், சீதோஷ்ண நிலை மாறி அதிக பனிப்பொழிவு காரணமாக, தக்காளி சாகுபடி பாதித்துள்ளன. அறுவடை செய்த பழங்களில், பெருமளவு அழுகி வீணாகி வருகிறது.

இந்நிலையில், உடுமலை சந்தையில், தக்காளி தொடர்ந்து விலை வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், போக்குவரத்து செலவுக்குக்கூடகட்டுபடியாகாத நிலை உள்ளது. தக்காளி விலை வீழ்ச்சியை தடுக்க, சந்தை வாய்ப்புகளை அதிகரிக்கவும், தக்காளி சாஸ் தொழிற்சாலை உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்திக்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...