கோவையில் குடும்ப பிரச்சனை காரணமாக தனது 4 வயது பெண் குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்டம், செல்வபுரத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக தனது 4 வயது பெண் குழந்தையை கொலை செய்த வழக்கில் குழந்தையின் தாய்க்கு ஆயுள் தண்டணை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை செல்வபுரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த்குமார். இவரது மனைவி திவ்யா. இத்தம்பதியினருக்கு 4 வயதில் ஹரிவர்ஷா என்ற பெண் குழந்தை இருந்த நிலையில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திவ்யா அவரது தாயார் வீட்டில் தங்கி இருந்து கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.



இந்நிலையில் வீட்டில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சனையில் வீட்டில் இருந்த தனது மகள் ஹரிவர்ஷாவை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கடந்த 03.06.2016 அன்று கொலைசெய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக திவ்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த வழக்கு கோவை மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் குழந்தையின் தாய் திவ்யாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் இன்று உத்திரவிட்டார். இதனையடுத்து திவ்யா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...