திருப்பூர் பல்லடம் அருகே அனுமதியின்றி, உரிய பாதுகாப்பின்றி நடைபெறும் மலர் கண்காட்சி!

பல்லடம் அடுத்த மங்கலம் சாலையில் தனியார் மண்டபத்தில் அனுமதியின்றியும், உரிய பாதுகாப்பின்றியும் நடைபெறும் மலர் கண்காட்சி குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உரிய அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில்மலர் கண்காட்சி நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல்லடம் அடுத்த மங்கலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மலர் கண்காட்சி கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த மலர் கண்காட்சியில் வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகள் விளையாட கூடிய ராட்டினம், பேய் வீடு போன்றவை இடம் பெற்றுள்ளன.



இந்த கண்காட்சி நடக்கும் தனியார் மண்டபம் மங்கலம் சாலையில் இருந்து குறுகிய சாலையில் அமைந்துள்ளதால் கண்காட்சி நடைபெறும் இடத்தில் எந்தவித பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தாமல், தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் தீயணைப்பு வாகனம் கூட வர முடியாத அளவுக்கு கடும் போக்குவரத்து நெரிசலோடு இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது.

பல்லடம் நகராட்சி ஆணையரிடமோ, வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.



மேலும் குழந்தைகள் விளையாடும் ராட்டினத்தை இயக்க பயன்படுத்தப்படும் என்ஜின், டீசல் கேன் உட்பட திறந்தவெளியில் தீ விபத்து ஏற்படும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

கண்காட்சியை காண வரும் பொது மக்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள், அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் சேவை,தீயணைப்பு வாகனம் போன்ற எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாமல் உள்ளது.

இதுகுறித்து பல்லடம் வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையாளரிடம் கேட்டபோது இந்த மலர் கண்காட்சிக்கு எங்களிடம் எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை எனவும் கண்காட்சி நடப்பதே எங்களுக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர்.



மேலும் கண்காட்சியை காண வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை குறுகிய சாலை ஓரங்களில் நிறுத்திவிட்டு செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெற்றால் ஆம்புலன்ஸோ தீயணைப்பு வாகனமோ உள்ளே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மிகவும் குறுகிய சாலை என்பதால் ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே உள்ளே இருப்பவர்களை மீட்க முடியும் என கூறப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று மங்கலம் சாலையில் நடைபெற்ற கண்காட்சியில் ராட்டினம் அறுந்து பெரும் விபத்து ஏற்பட்டது.

இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...