கோவை பவானி ஆற்றில் ஒரே நாளில் 3 பெண்கள் உட்பட 5 பேர் நீரில் மூழ்கி பலியான சோகம்

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பவானி ஆற்றில் குடும்பத்துடன் குளிக்க சென்ற 3 பெண்கள் மற்றும் நண்பர்களுடன் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் என 5 பேர் ஒரே நாளில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பவானி ஆற்றில் இருவேறு சம்பவங்களில் 3 பெண்கள் 2 சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (53). இவர் சிறுமுகை பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது தங்கை பாக்கியா (45) சிறுமுகையில் அரசு மருத்துவமனை எதிரே புதிதாக வீடு வாங்கி உள்ளார்.

இந்நிலையில் பாக்கியா தனது வீட்டிற்கு பால் காய்ச்சுவதற்காக இவரது மருமகள் ஜமுனா (25) மற்றும் நண்பர்களான நரசிம்மநாயக்கன் பாளையத்தை கஸ்தூரி (30), சகுந்தலா (40) ஆகியோர் சிறுமுகைக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில். பாலகிருஷ்ணன், பாக்கியா, ஜமுனா, கஸ்தூரி மற்றும் சகுந்தலா ஆகிய 5 பேரும் சிறுமுகை வச்சினாம்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு பில்லூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 5 பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அங்கே இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.



இந்நிலையில், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாக்கிய(53), சகுந்தலா (40), ஜமுனா (30) ஆகியோர் பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் பாலகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோரை மீட்ட பொதுமக்கள் இருவரையும் மேட்டுபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

இதேபோல் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிராமம் உப்புபள்ளம் பவானி ஆற்றில் மாலை 6 சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உப்பிளிபாளையத்தை சேர்ந்த கெளதம் மற்றும் மற்றொரு சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் உள்ளூர் பரிசல்காரர்கள் சிறுவர்களின் உடலை தேடி வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்த சம்பவங்களில் 5 பேர் பவானி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...