போரில் வீரமரணமடைந்த உதகை ராணுவ வீரர் ராமகிருஷ்ணனின் நினைவுநாள் - ஆட்சியர் நேரில் அஞ்சலி!

2001ஆம் ஆண்டு காஷ்மீர் எல்லையில் நடைபெற்ற ஆப்ரேஷன் மேக்தூத் போரில் வீரமரணம் அடைந்த ராமகிருஷ்ணனின் 21ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் நேரில் அஞ்சலி செலுத்தினார்.


நீலகிரி: ராணுவ வீரர் ராமகிருஷ்ணனின் 21ஆம் ஆண்டு நினைவு நாளில் நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள அவரது நினைவிடத்தில் ஆட்சியர் அம்ரித் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அமைந்துள்ள கப்பத்தொரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். ராணுவ வீரரான இவர், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதி ஆன 16,200 அடி உயரத்தின் இமயமலை பனிப்பொழிவில் பணியாற்ரி வந்துள்ளார்.

இந்நிலையில், 2001ஆம் ஆண்டு சியாச்சின் - கிளாசியர் பகுதியில் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நடந்த ஆப்ரேஷன் மேக்தூத் என்ற போரில் ராமகிருஷ்ணன் வீரமரணம் அடைந்தார்.

வீரமரணம் அடைந்த ராமகிருஷ்ணனுக்கு சொந்த ஊரான கப்பத்தொரை கிராமத்தில் உடல் கொண்டு வரப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டு போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.

இதனிடையே, போரில் வீரமரணம் அடைந்த ராமகிருஷ்ணனுக்கு நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்தின் சார்பாக கடந்த ஆண்டு முதல் ராணுவ முறைப்படி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில், இன்று நடைபெற்ற 21-வது நினைவு தினத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், குன்னூர் வெலிங்டன் ராணுவ அகாடமி கமாண்டண்ட் எம் சி ஐயப்பன், உதகை நகர மற்றும் ஊரக காவல் துணை கண்காணிப்பாளர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், மற்றும் பள்ளி மாணவர் மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மௌன அஞ்சலி செலுத்தி, ராணுவ வீரரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்வின் போது ராமகிருஷ்ணனின் தாயார் சுப்புலட்சுமி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர், அப்போது உடனிருந்த மாவட்ட ஆட்சியர் அம்ரித் அவருக்கு ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் அம்ரித், இந்திய தாய் நாட்டிற்காக மழையிலும், கடும் பனிப்பொழிவிலும் தொடர்ச்சியாக போராடிவரும் சூழ்நிலையில் ராணுவ வீரர்களுக்கான அனைவரும் மரியாதை செலுத்த வேண்டும் என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...