கோவையில் இரு சக்கர வாகனம் திருட்டு - சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!

கோவை சின்னாறு அணைக்கட்டு அருகே இரு சக்கர வாகனத்தை திருடிய வழக்கில் சிறுவர்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை வேடப்பட்டி பிள்ளையார் கோயில் வீதியை சேர்ந்தவர் குரு பிரசாத் (வயது23). இவர் நேற்று தனது நண்பர்களான கருணாகரன், கௌதம், சஞ்சய் குமார் ஆகியோருடன் இரண்டு வாகனங்களில் ஈஷா நோக்கி சென்றனர்.

முன்னதாக, சின்னாறு அணைக்கட்டை பார்ப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஜீவசமாதி அருகே வண்டியை நிறுத்திவிட்டு அணைக்கட்டை பார்த்துவிட்டு மீண்டும், வந்து பார்த்தபோது குருபிரசாத் வந்த இருசக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் அக்கம் பக்கத்தில் கேட்டபோது மூன்று நபர்கள் இரு சக்கர வாகனத்தை தள்ளி சென்றதாக தெரிவித்தனர். இதை அடுத்து நண்பர்களுடன் நரசிபுரம் சாலையில் சென்றபோது அவரது இரு சக்கர வாகனத்தை மூன்று நபர்கள் தள்ளிச் சென்றது தெரியவந்தது.

இதைப்பார்த்த குருபிரசாத் மற்றும் நண்பர்கள் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது இருசக்கர வாகனத்தை திருடி சென்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.



பின்னர், பிடிபட்ட மூன்று பேரையும் ஆலாந்துறை போலீசில் குருபிரசாத் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர்கள் பூளுவபட்டியை சேர்ந்த ரஜீவன் (வயது21), மற்றும் 17, 16 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...