கோவையில் வருமானவரித்துறை அதிகாரியாக நடித்த இளம் பெண் கைது - பல லட்சம் ரூபாய் பணமோசடியில் ஈடுபட்டதும் அம்பலம்!

கோவையில் வருமான வரித்துறை அதிகாரிபோல் நடித்து, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் சீனிவாசராகவன் வீதியில் உள்ள மகளிர் விடுதியில் மதுரை அண்ணா நகர் மேலமடையை சேர்ந்த ராமலட்சுமி (வயது31) என்ற பெண் மூன்று வாரங்களாக தங்கியிந்தார்.

எம்.காம். பட்டதாரியான அவர், தான் சிவில் சர்வீசஸ் தேர்ச்சி பெற்றவர், வருமான வரித்துறையில் அதிகாரியாக வேலை பார்ப்பதாகவிடுதியில் உடன் தங்கியிருந்த பெண்களிடம் கூறியுள்ளார்.

அவரது நடை, உடை, பாவனைகளை பார்த்த மற்ற பெண்கள் அதை உண்மை என்று நம்பிவிட்டனர். இதை பயன்படுத்திக் கொண்ட ராமலட்சுமி, நல்ல சம்பளத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித்தருவதாக கூறி, ஆளுக்குத் தகுந்தபடி 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் வசூலித்துள்ளார். ‘அவசர வேலைக்கு தேவைப்படுகிறது’ என்று கூறி இரு பெண்களிடம் லேப்டாப்பையும் அவர்வாங்கிச்சென்றுள்ளார்.

இதையடுத்து, சில நாட்களாக ராமலட்சுமியைக் காணாததால், பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்தில் தகவல்தெரிவித்தனர். அதன்பேரில், சிறப்பு எஸ்.ஐ., ஆனந்தமூர்த்தி வழக்கு பதிவுசெய்தார். எஸ்.ஐ., பிரபு தலைமையிலான காவல்றையில் நடத்திய விசாரணையில், ராமலட்சுமி ஒரு மோசடிப் பேர்வழி என்று தெரியவந்தது.

தோழியின் வீட்டில் பதுங்கியிருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிபதி உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த ராமலட்சுமி, வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பெயர்களில் அறிமுகம் ஆகி, அரசு வேலை வாங்கித்தருவதாக பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதுமட்டுமின்றி, கொக்கோகோலா நிறுவனத்தில் உயர் அதிகாரியாக வேலை பார்ப்பதாக கூறிக்கொண்ட ராமலட்சுமி, அங்கு வேலை வாங்கித் தருவதாக கூறி பீளமேடு இளைஞரிடம் நாலரை லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராமலட்சுமியின் இந்தமோசடிக்கு வேறு சிலரும் உடந்தையாக இருந்துள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருவதோடு, மோசடிக்கு பின்னால் உள்ள முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...