கோவை குறைதீர்ப்புக் கூட்டத்தில் பொதுமக்களை தாக்கிய திமுக கவுன்சிலர் - வைரல் வீடியோ

கோவை அன்னூர் அருகே தரமற்ற சாலைகள் போடப்பட்டதாக குறைதீர்ப்புக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பொதுமக்கள் மீது திமுக கவுன்சிலர் மற்றும் அவரது ஆட்கள் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே கோவில்பாளையத்தை அடுத்துள்ள கொண்டையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9வது வார்டு லட்சுமி கார்டன் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சில நாட்களுக்கு முன் 6 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகள் தரமற்ற முறையில் இருப்பதாக புகார் எழுந்தது.



இந்த நிலையில் நேற்றிரவு லட்சுமி கார்டன் பகுதியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் 9 வது வார்டு திமுக கவுன்சிலர் மோகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் தரமற்றமுறையில் சாலைஅமைக்கப்பட்டுள்ளதாக கூறி, அது குறித்து கேள்வி எழுப்பினர்.இதனால் கவுன்சிலர் மோகன் மற்றும் கேள்வியெழுப்பிய இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



வாக்குவாதம் முற்றிய நிலையில், திமுக கவுன்சிலர் மோகன் உட்பட அவரது தரப்பினர்கள் கேள்வி கேட்டவர்களை தாக்கியுள்ளனர். மேலும், திமுகவை சேர்ந்த பெண் ஒருவர் பொதுமக்களில் ஒருவரை செருப்பால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மூவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவம் தொடர்பாகபோலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினர் மருத்துவமனையில் அனுமதியாகிக்கொண்டு, பொதுமக்கள் மீது பொய் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறைதீர்ப்புக் கூட்டத்தில், திமுக கவுன்சிலர் பொதுமக்களை தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...