தாராபுரத்தில் பழைய மார்க்கெட் இடிக்கும் பணி தீவிரம்

தாராபுரத்தில் பழைய மார்க்கெட் வணிக வளாகத்தை இடித்து விட்டு புதிய வளாகம் கட்டுவதற்காக ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், பழைய கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.



திருப்பூர்: தாராபுரம் தினசரி மார்கெட் பகுதியில் ரூ.2.03 கோடி செலவில் புதிய வணிக வளாகம் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தினசரி மார்க்கெட் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமத்துடன் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இதனை கருத்தில் கொண்ட நகராட்சி நிர்வாகம், அனைத்து உறுப்பினர்கள் ஒத்துழைப்போடு புதிய வணிக கட்டிடம் கட்ட அரசிடமிருந்து நிதி பெறப்பட்டது.

இதற்கான பணிகள் கூடிய விரைவில் தொடங்கி புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் அமைக்கப்பட்ட உள்ளது. தினசரி மார்க்கெட்டில் புதிய வணிக வளாகம் கட்டப்படவுள்ளதால், வியாபாரிகள் நலன் கருதி வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளுடன், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் ஆய்வு செய்தார்.



அதன்படி பழைய மார்க்கெட் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு கடந்த 2 நாட்களாகப் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



Newsletter

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...