தாராபுரத்தில் பழைய மார்க்கெட் இடிக்கும் பணி தீவிரம்

தாராபுரத்தில் பழைய மார்க்கெட் வணிக வளாகத்தை இடித்து விட்டு புதிய வளாகம் கட்டுவதற்காக ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், பழைய கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.



திருப்பூர்: தாராபுரம் தினசரி மார்கெட் பகுதியில் ரூ.2.03 கோடி செலவில் புதிய வணிக வளாகம் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தினசரி மார்க்கெட் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமத்துடன் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இதனை கருத்தில் கொண்ட நகராட்சி நிர்வாகம், அனைத்து உறுப்பினர்கள் ஒத்துழைப்போடு புதிய வணிக கட்டிடம் கட்ட அரசிடமிருந்து நிதி பெறப்பட்டது.

இதற்கான பணிகள் கூடிய விரைவில் தொடங்கி புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் அமைக்கப்பட்ட உள்ளது. தினசரி மார்க்கெட்டில் புதிய வணிக வளாகம் கட்டப்படவுள்ளதால், வியாபாரிகள் நலன் கருதி வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளுடன், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் ஆய்வு செய்தார்.



அதன்படி பழைய மார்க்கெட் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு கடந்த 2 நாட்களாகப் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...