ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்க ஆன்லைன்‌ முன்பதிவு அவசியம்!‌

கோவையில்‌ நடைபெறும்‌ ஈஷா மஹாசிவராத்திரி விழாவில்‌ இலவசமாக பங்கேற்க விரும்பும்‌ பக்தர்கள்‌ ஆன்லைனில்‌ முன்பதிவு செய்து கொள்ளலாம்‌ என ஈஷா நிர்வாகம் தெரிவித்துள்ளது.



கோவை: ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்பதற்கு ஆன்லைன்‌ முன்பதிவு அவசியம்‌ என ஈஷா மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'தென்‌ கயிலாயம்‌' என அழைக்கப்படும்‌ வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில்‌ அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில்‌ மஹா சிவராத்திரி விழா ஆண்டுதோறும்‌ மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு மஹா சிவராத்திரி விழா பிப்ரவரி 18-ம்‌ தேதி மாலை 6 மணி முதல்‌ மறுநாள்‌ காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு மிகச்‌ சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ்விழாவில்‌ நேரில்‌ கலந்து கொள்ள விரும்பும்‌ பக்தர்கள்‌ https://isha.co/msr23-tn என்ற லிங்கை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்‌. இலவசமாக பங்கேற்க விரும்புபவர்கள்‌ 'தாமிரபரணி' என்ற பிரிவை தேர்வு செய்து பெயர்‌, அலைபேசி எண்‌, இ-மெயில்‌ முகவரி ஆகியவற்றை பதிவிட்டு முன்பதிவு செய்ய வேண்டும்‌. முதலில்‌ வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்‌ இந்த முன்பதிவு நடைபெறும்‌.

வெற்றிகரமாக முன்பதிவு செய்த பிறகு, விழாவில்‌ பங்கேற்பதற்கான இ-பாஸ்‌ பதிவு செய்தவர்களின்‌ இ-மெயில்‌ முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்‌. பிப்ரவரி 18ஆம்‌ தேதி ஈஷாவிற்கு வரும்‌ போது, மலைவாசல்‌ அருகே இருக்கும்‌ நுழைவு சீட்டு வழங்கும்‌ இடத்தில்‌ இந்த இ-பாஸை காண்பித்து நுழைவு சீட்டை பெற்று கொள்ளலாம்‌.

இவ்விழா மாலை 6 மணிக்கு தியான லிங்கத்தில்‌ நிகழ்த்தப்படும்‌ பஞ்சபூத ஆராதனையுடன்‌ தொடங்கும்‌. லிங்க பைரவி தேவியின்‌ மஹா யாத்திரை, உள்நிலையில்‌ பரவசத்தில்‌ ஆழ்த்தும்‌ சக்திவாய்ந்த தியானங்கள்‌, சத்குருவின்‌ சத்சங்கம்‌, கண்ணைக் கவரும்‌ ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும்‌ புகழ்பெற்ற கலைஞர்களின்‌ இசை மற்றும்‌ நடன நிகழ்ச்சிகளுடன்‌ விழா விடிய விடிய களைக்கட்ட உள்ளது.

விழாவில்‌ பங்கேற்கும்‌ அனைத்து பக்தர்களுக்கும்‌ அன்றைய தினம்‌ இரவு மஹா அன்னதானம்‌ வழங்கப்படும்‌ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...