திருப்பூரில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணி நீக்க விவகாரம் - ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம்!

திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரிந்த 11 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன அலுவலர்கள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணியாற்றி வந்த 11 வட்டார ஒருங்கிணைப்பாளர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்துள்ளனர்.



இது சமூக நீதிக்கு எதிரான செயல் என்றும், வட்டார ஒருங்கிணைப்பாளர்களின் பணி நீக்க ஆணையினை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன அலுவலர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலககம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மகளிர் திட்டத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், தகுதி வாய்ந்த வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு வட்டார மேலாளர் பதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...