ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 2வது நாளாக உள்ளிருப்புப் போராட்டம் - கோவை அரசு மருத்துவமனை முதல்வர் பேச்சுவார்த்தை!

ஊதியம் உயர்வு கோரி போராடி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும், காவல்துறையை அணுக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா பேச்சு.



கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிரிஸ்டல் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் பணியாமர்த்தப்பட்ட பணியாளர்கள் 2வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இது குறித்துப் பேசிய கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா, நேற்று காலையில் இருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களை வைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அவர்கள் அவர்களது கோரிக்கைகளில் உறுதியாக உள்ளனர். காவல்துறையினரை அணுக வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள சம்பள உயர்வுக்கும் அரசு மருத்துவமனைக்கும் சம்பந்தம் இல்லை. அந்த சம்பளத்தை கிறிஸ்டல் நிறுவனம் தான் வழங்க வேண்டும். கிறிஸ்டல் நிறுவனத்தினரை அழைத்துள்ளோம். அவர்கள் வந்தபின் அவர்களுடன் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவு எட்டப்படும், என்றார்.

வட மாநில தொழிலாளர்கள் புதிதாக வேலைகளுக்கு அழைத்து வரப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் நிர்மலா, வட மாநில தொழிலாளர்கள் தென் மாநில தொழிலாளர்கள் என தற்பொழுது நாம் பிரித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...