கோவை அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்

ஊதிய உயர்வு, அடிப்படை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் இரண்டாவது நாளாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ரூ.721 வழங்கப்படும் என முன்னாள் மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்தார்.

அதன்பின்னர் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இருப்பினும் பல மாதங்களாக அந்த தொகை வழங்கப்படவில்லை எனக் கூறி நேற்று 80க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.



அவர்களிடம் மருத்துவமனை முதல்வர் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை.



இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



நேற்றை விட இன்றைய தினம் அதிகப்படியான தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...