சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு - ஈஷாவில் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கும் பணி தீவிரம்!

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ பங்கேற்கவுள்ளார். இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈஷா யோகா மையத்ததில் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.



கோவை: கோவை ஈசா யோகாவில் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ள சிவராத்திரி நிகழ்ச்சியில் இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ கலந்து கொள்ள உள்ளார்.

இதையொட்டி, 18 ஆம் தேதி மாலை 3 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமான மூலம் அவர் கோவை விமான நிலையம் வருகிறார்.

முதல் முறையாக கோவை வரும் குடியரசு தலைவர் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகை செல்கிறார்.

பின்னர் வடவள்ளி, தொண்டாமுத்தூர் வழியாக ஈசா யோகா மையத்திற்கு செல்கிறார்.

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு செல்லவுள்ள சாலைகளை ஐஜி சுதாகர் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஸ்ணனுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதுமட்டுமின்றி, குடியரசு தலைவர் வருகையையொட்டி சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ வருகையை ஒட்டி ஈசா யோகா மையத்தில் ஹலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...