உடுமலையில் செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்

உடுமலை கால்நடை மருத்துவனை சார்பில், நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாமில், ஏராளமான பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நடைபெற்ற செல்ல பிராணிகளுக்கான தடுப்பூசி விழிப்புணர்வு முகாமில் ஏராளமான பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

உடுமலை கால்நடை மருத்துவமனை சார்பில், நேதாஜி மைதானத்தில் செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.



திருப்பூர் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், தலைமை மருத்துவர், செல்லப் பிராணிகளால் பரவும் நோய்கள் குறித்து விளக்கினார்.

நாய்கள் வளர்ப்போர் 3 மாத காலத்தில் இருந்து ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். ஆண்டு தோறும் தடுப்பூசி போட வேண்டும். பிராணிகள் கடித்தால் கடித்த இடத்தில் சூடு வைப்பது, மஞ்சள் தடவுவது, உப்பு தண்ணீர் ஊற்றுவது, கிருமிநாசினி தடவுவது கூடாது. பதிலாக கடித்த பகுதியில் சோப்பு போட்டு நன்றாக கழுவிவிட வேண்டும். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும், என்றார்.



மேலும், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வம் கூறுகையில், செல்லப் பிராணிகள் வளர்ப்போர் நகராட்சியில் பதிவு செய்ய வேண்டும். பொதுமக்கள் மற்றும் அருகில் வசிப்போருக்கு தொல்லையின்றி வளர்க்க வேண்டும். வீட்டுக்குள்ளேயே பிராணிகளை வளர்க்க வேண்டும், என்றார்.

இந்த முகாமில், கால்நடை உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், உதவி பராமரிப்பு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...