துடிப்புடன் இருந்த இருதயத்தில் குழாய் மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆசிய அளவில் கேஎம்சிஎச் சாதனை


கோவையைச் சேர்ந்த கேஎம்சிஎச் மருத்துவமனையில் துடித்துக்கொண்டிருந்த இதயத்தில் இருதய வால்வு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. மருத்துவமனைத் தரப்பில் ஆசிய அளவில் இச்சிகிச்சை தற்போதே முதன்முறையாக நடைபெற்றுள்ளது என கூறப்படுகிறது.

இன்று காலை இதுகுறித்து கேஎப்சிஎச் தலைவர் நல்ல ஜி.பழனிச்சாமி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

இந்த அறுவை சிகிச்சை கேஎம்சிஎச் வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாகும். அரோட்டிக் வால்வு ஸ்டெனோசிஸ் நோயைக் குணப்படுத்துவதில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகும். 

அமெரிக்காவில் இதுவரை 7-8 மனிதர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ஆசியாவில் கேஎம்சிஎச் மருத்துவமனை இதில் முன்னோடியாக தற்போது இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சையின் வெற்றிச்சதவிகிதம் 90 முதல் 95 சதவிகிதம் ஆகும். வயதாகும் போது இருதயத்தில் உள்ள இரத்தக்குழாய்கள் கடிணமாக மாறுகின்றன. இந்த 76 வயது நோயாளி இதற்கு முன்னரே இருதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துள்ளார். எங்கள் மருத்துவமனையில் உள்ள நிபுனர்கள் வெனிபிரி வால்வை பொருத்துவதே இதற்கு சிறப்பான சிகிச்சையாக இருக்கும் என்று பரிந்துரை செய்தனர்.

எங்களுடையே முதல் முயற்சியிலேயே இந்த சிகிச்சை வெற்றிகரமாக அமைந்துள்ளது. தற்போது நோயாளி சிகிச்சை முடிந்த இரண்டு நாட்களிலேயே நடக்கத் துவங்கிவிட்டார்" என தெரிவித்தார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இருதய சிகிச்சை நிபுனர் மருத்துவர் தாமஸ் அலெக்ஸ்சான்டர் மற்றும் இருதய சிகிச்சை பிரிவின் இயக்குநர் பிரசாந்த் வைஜனாத் ஆகியோரை நல்ல ஜி.பழனிச்சாமி பத்திரிகையாளர்கள் மத்தியில் அறுமுகம் செய்தார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...