உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு எழுதுபவர்களை அப்புறப்படுத்தாதீர்கள்..! - இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!

உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஏழை, எளிய, படிக்கத் தெரியாத மக்களுக்கு மனு எழுதிக் கொடுத்து வந்தவர்களை அப்புறப்படுத்தும் நகராட்சி உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு மனு எழுதி கொடுத்து வந்த நபர்களை வெளியேற்றக் கூடாது என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.



உடுமலை நகராட்சிக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுமார் பத்துக்கு மேற்பட்டோர் பல வருடங்களாக ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் படிக்கத் தெரியாத மக்களுக்கு உதவி செய்கின்ற நோக்கத்துடன் மனுக்கள் எழுதிக் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது நகராட்சி சார்பில் இப்பகுதியில் யாரும் இருக்க கூடாது என தெரிவித்த காரணத்தால் பலரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதனிடம் மனு ஒன்று வழங்கப்பட்டது.



நகராட்சி ஆணையாளர் மனுவை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த மாட்டார்கள் என உறுதி அளித்தார்.



இந்த மனு வழங்கும் நிகழ்வில் மாவட்ட செயலாளர் மூர்த்தி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன், தமிழர் பண்பாட்டு பேரவை நாராயணன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...