உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு எழுதுபவர்களை அப்புறப்படுத்தாதீர்கள்..! - இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!

உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஏழை, எளிய, படிக்கத் தெரியாத மக்களுக்கு மனு எழுதிக் கொடுத்து வந்தவர்களை அப்புறப்படுத்தும் நகராட்சி உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு மனு எழுதி கொடுத்து வந்த நபர்களை வெளியேற்றக் கூடாது என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.



உடுமலை நகராட்சிக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுமார் பத்துக்கு மேற்பட்டோர் பல வருடங்களாக ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் படிக்கத் தெரியாத மக்களுக்கு உதவி செய்கின்ற நோக்கத்துடன் மனுக்கள் எழுதிக் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது நகராட்சி சார்பில் இப்பகுதியில் யாரும் இருக்க கூடாது என தெரிவித்த காரணத்தால் பலரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதனிடம் மனு ஒன்று வழங்கப்பட்டது.



நகராட்சி ஆணையாளர் மனுவை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த மாட்டார்கள் என உறுதி அளித்தார்.



இந்த மனு வழங்கும் நிகழ்வில் மாவட்ட செயலாளர் மூர்த்தி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன், தமிழர் பண்பாட்டு பேரவை நாராயணன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...