முதுமலை நெடுஞ்சாலையில் தோகை விரித்தாடிய மயில் - இணையத்தில் வீடியோ வைரல்!

பனிக்காலம் முடிந்து கோடைக் காலம் துவங்க உள்ள நிலையில் முதுமலை நெடுஞ்சாலையில் பெண் மயில்களை வசிகரிக்கும் விதமாக ஆண் மயில், தோகை விரித்தாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.



நீலகிரி: மசினகுடியிலிருந்து தெப்பக்காடு செல்லும் நெடுஞ்சாலையில் தோகை விரித்தாடிய ஆண் மயிலை, பெண் மயில்களும் சுற்றிச் சுற்றி வரும் காட்சியை வாகன ஒட்டிகள் வியர்ந்து பார்த்துச் சென்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிக்காலம் முடிந்து கோடைக் காலம் துவங்க உள்ளது. இதனால் வனப் பகுதிகள் வறண்டு வரும் நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திலும் மரம், செடி, கொடிகள் பொலிவிழந்து வருகின்றன.



இதனால் வன விலங்குகள் சாலை ஓரத்தில் உலா வர தொடங்கி உள்ள நிலையில் மசினகுடியிலிருந்து தெப்பக்காடு செல்லும் நெடுஞ்சாலைக்கு வந்த ஒருஆண் மயில் தன் அருகே வந்த பெண் மயில்களைகாதல் வசப்படுத்தி அவற்றை வசிகரிக்கும் விதமாகத் தனது தோகைகளை விரித்து நடனமாடியது. ஆண் மயிலின் நடனத்தைப் பார்த்து பெண் மயில்களும் சுற்றிச் சுற்றி வந்தன.

அப்போது அந்த வழியே சாலையில் சென்ற வாகனங்களை கூட பொருட்படுத்தாத ஆண் மயில் தொடர்ந்து நடனமாடியதை வீடியோவாக பதிவு செய்த வாகன ஓட்டிகள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...