முதுமலை நெடுஞ்சாலையில் தோகை விரித்தாடிய மயில் - இணையத்தில் வீடியோ வைரல்!

பனிக்காலம் முடிந்து கோடைக் காலம் துவங்க உள்ள நிலையில் முதுமலை நெடுஞ்சாலையில் பெண் மயில்களை வசிகரிக்கும் விதமாக ஆண் மயில், தோகை விரித்தாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.



நீலகிரி: மசினகுடியிலிருந்து தெப்பக்காடு செல்லும் நெடுஞ்சாலையில் தோகை விரித்தாடிய ஆண் மயிலை, பெண் மயில்களும் சுற்றிச் சுற்றி வரும் காட்சியை வாகன ஒட்டிகள் வியர்ந்து பார்த்துச் சென்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிக்காலம் முடிந்து கோடைக் காலம் துவங்க உள்ளது. இதனால் வனப் பகுதிகள் வறண்டு வரும் நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திலும் மரம், செடி, கொடிகள் பொலிவிழந்து வருகின்றன.



இதனால் வன விலங்குகள் சாலை ஓரத்தில் உலா வர தொடங்கி உள்ள நிலையில் மசினகுடியிலிருந்து தெப்பக்காடு செல்லும் நெடுஞ்சாலைக்கு வந்த ஒருஆண் மயில் தன் அருகே வந்த பெண் மயில்களைகாதல் வசப்படுத்தி அவற்றை வசிகரிக்கும் விதமாகத் தனது தோகைகளை விரித்து நடனமாடியது. ஆண் மயிலின் நடனத்தைப் பார்த்து பெண் மயில்களும் சுற்றிச் சுற்றி வந்தன.

அப்போது அந்த வழியே சாலையில் சென்ற வாகனங்களை கூட பொருட்படுத்தாத ஆண் மயில் தொடர்ந்து நடனமாடியதை வீடியோவாக பதிவு செய்த வாகன ஓட்டிகள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...