வால்பாறை அருகே தேனீக்கள் தாக்கியதில் ஒருவர் பலியான சோகம்

வால்பாறை அருகே லோயர் பாரலை எஸ்டேட் பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது தேனீக்கள் தாக்கியதில் மாரிமுத்து என்பவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேதேனீக்கள் தாக்கியதில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அருகேயுள்ள லோயர் பாரலை எஸ்டேட் பகுதியில் மாரிமுத்து (45) என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுனராக வேலை செய்து வந்த மாரிமுத்து உடல் நலக்குறைபாடு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இதனிடையே நேற்று பிற்பகல் வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்கு மாரிமுத்து கடை வீதிக்கு சென்றுள்ளார். அப்போது கூட்டமாக வந்த தேனீக்கள் அவரை தாக்கியுள்ளது.



இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் கவுன்சிலர் அன்பரசன் செல்வம் ஆகியோர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.



மேலும் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

சாலையில் நடந்து சென்றவரை தேனீக்கள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...