வால்பாறை அருகே தேனீக்கள் தாக்கியதில் ஒருவர் பலியான சோகம்

வால்பாறை அருகே லோயர் பாரலை எஸ்டேட் பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது தேனீக்கள் தாக்கியதில் மாரிமுத்து என்பவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேதேனீக்கள் தாக்கியதில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அருகேயுள்ள லோயர் பாரலை எஸ்டேட் பகுதியில் மாரிமுத்து (45) என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுனராக வேலை செய்து வந்த மாரிமுத்து உடல் நலக்குறைபாடு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இதனிடையே நேற்று பிற்பகல் வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்கு மாரிமுத்து கடை வீதிக்கு சென்றுள்ளார். அப்போது கூட்டமாக வந்த தேனீக்கள் அவரை தாக்கியுள்ளது.



இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் கவுன்சிலர் அன்பரசன் செல்வம் ஆகியோர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.



மேலும் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

சாலையில் நடந்து சென்றவரை தேனீக்கள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...