கோவை மாவட்ட போலீசார் அதிரடி சோதனை - ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்

பேரூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி உள்ளிட்ட ஆறு உட்கோட்டங்களிலும் 46 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டு ஒரே நாளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது.


கோவை: பொள்ளாச்சி, பேரூர் உள்ளிட்ட ஆறு இடங்களில் தனிப்படையினர் அதிரடியாகச் சோதனை செய்து 28 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் பேரூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி உள்ளிட்ட ஆறு உட்கோட்டங்களிலும் 46 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டு இன்று ஒரே நாளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், 9 பேர் மீது வழக்கு பதிவும், 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 28 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.



இதேபோல் அரசு தடை உத்தரவை மீறி குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.



இதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் பகுதியில் அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிபொருள் வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4 அவுட்டு காய்களை பறிமுதல் செய்தனர்.



காரமடை பகுதியில் சோதனை மேற்கொண்ட தனி படை போலீசார் அங்கு உரிய அனுமதி இன்றி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 600 லாட்டரி டிக்கெட் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

ஒரே நாளில் தொடர் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு வரும் 25 நபர்கள் மீது நன்னடத்தை வினை பத்திரம் பெற்று எச்சரித்து விடுக்கப்பட்டுள்ளனர். இதே போல் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட போலீஸ் எஸ் பி பத்ரி நாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...