நீலகிரி மாயாற்றின் குறுக்கே நடைபாதை - கும்கி யானைகள் உதவியுடன் பணிகள் தீவிரம்!

நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் உள்ள பழங்குடியின மக்களுக்காக மாயார் ஆற்றின் குறுக்கே தற்காலிக நடைபாதை அமைக்கும் பணி, கிருஷ்ணா, ஜான் என இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் மைய பகுதியில் தெப்பக்காடு பழங்குடியின கிராமம் உள்ளது. மாயார் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள், ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.

மசினகுடி பகுதி மக்களும் அந்த பாலத்தை பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாலம் கட்ட பழைய பாலம் உடைக்கப்பட்டது.

இதனால், தெப்பக்காடு பகுதியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பழங்குடியின மக்கள் 2 கி.மீ தற்காலிக இணைப்பு சாலையில் வனப்பகுதி வழியாக சுற்றி வரும் சூழ்நிலை இருந்து வருகிறது. அவ்வாறு வரும்போது புலிகள், கரடிகள் போன்ற வனவிலங்குகள் தாக்கும் ஆபத்து உள்ளது.



இதனையடுத்து பழங்குடியின மக்கள் எளிதில் வீடுகளுக்கு சென்று வருவதற்கு வசதியாக, மாயாற்றின் நடுவே காய்ந்த மரங்களை வைத்து தற்காலிக நடைபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.



அதன்படி, முதுமலை தெப்பக்காடு யானை முகாமில் உள்ள கிருஷ்ணா மற்றும் ஜான் என்ற இரண்டு கும்கி யானைகள் உதவியோடு ஆற்றின் நடுவே மரங்கள் மூலம் நடைபாதை அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.



இதனிடையே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு உடைக்கப்பட்ட பாலத்தை விரைவாக கட்டி முடிக்க வேண்டும் எனவும் தெப்பக்காடு பழங்குடியின மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...