கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம் - பல்லடத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.



திருப்பூர்: தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் நாளை கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது, கொத்தடிமை தொழிலாளர் முறைக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



பல்லடம் தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் சுகந்தி, நில வருவாய் ஆய்வாளர் அனிதா மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் செல்வகுமார் ஆகியோர் பல்லடம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்கள், கடையில் பணிபுரியும் தொழிலாளர்கள்,

கடை உரிமையாளர்கள் ஆகியோரிடம் தொழிலாளர்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு எப்படி அணுகுவது என்பது குறித்தும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள், வேலை செய்யும் சுதந்திரம், சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் பெரும் உரிமை குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.



நாளை அரசு பள்ளி மற்றும் பொது இடங்களில் கையெழுத்து இயக்கம் நடத்திடவும், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...