கோவை இடையர்பாளையத்தில் மாநில அளவிலான யோகா போட்டி - மாணவ, மாணவிகள் அசத்தல்

கோவை இடையர்பாளையத்தில் நடந்த 11வது மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில், பல்வேறு பிரிவுகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



கோவை: இடையர்பாளையத்தில் 11வது மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

கோவையில் 11வது மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி, இடையர்பாளையத்தில் உள்ள தனியார் ஹாலில் நடைபெற்றது. ஆல்பா யோகா பயிற்சி மையம் சார்பில் நடைபெற்ற போட்டிகளை யோகா கல்ச்சுரல் சொசைட்டி முன்னாள் தலைவர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற யோகா போட்டிகளில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 4 பிரிவுகளாகவும், இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தனியாகவும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண்களுக்கு தனி பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன.



இதில் போட்டியாளர்கள் 3 ஆசனங்களை 3 நிமிடங்கள் செய்து காட்டினர். மேலும் பேக் பெண்டிங், ஹேண்ட் பேலான்சிங், லெக் பேலன்சிங், பாடி டிவிஸ்டிங் ஆசனங்களும் ஆர்டிஸ்டிக் யோகா, ரிதமிக் யோகா உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு வகையான ஆசனங்களை செய்து காண்பித்து அசத்தினர்.



இதில் ஆல்பா யோகா பயிற்சி மைய நிறுவனர் பழனிச்சாமி மற்றும் யோகா ஆசிரியர்கள் சம்பத்குமார், ராஜ்குமார், நாகலட்சுமி ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.



வெற்றி பெற்றவர்களுக்கு யோகா குரு சுவாமி தேஜாமயானந்தா பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...