கோவை இடையர்பாளையத்தில் மாநில அளவிலான யோகா போட்டி - மாணவ, மாணவிகள் அசத்தல்

கோவை இடையர்பாளையத்தில் நடந்த 11வது மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில், பல்வேறு பிரிவுகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



கோவை: இடையர்பாளையத்தில் 11வது மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

கோவையில் 11வது மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி, இடையர்பாளையத்தில் உள்ள தனியார் ஹாலில் நடைபெற்றது. ஆல்பா யோகா பயிற்சி மையம் சார்பில் நடைபெற்ற போட்டிகளை யோகா கல்ச்சுரல் சொசைட்டி முன்னாள் தலைவர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற யோகா போட்டிகளில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 4 பிரிவுகளாகவும், இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தனியாகவும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண்களுக்கு தனி பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன.



இதில் போட்டியாளர்கள் 3 ஆசனங்களை 3 நிமிடங்கள் செய்து காட்டினர். மேலும் பேக் பெண்டிங், ஹேண்ட் பேலான்சிங், லெக் பேலன்சிங், பாடி டிவிஸ்டிங் ஆசனங்களும் ஆர்டிஸ்டிக் யோகா, ரிதமிக் யோகா உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு வகையான ஆசனங்களை செய்து காண்பித்து அசத்தினர்.



இதில் ஆல்பா யோகா பயிற்சி மைய நிறுவனர் பழனிச்சாமி மற்றும் யோகா ஆசிரியர்கள் சம்பத்குமார், ராஜ்குமார், நாகலட்சுமி ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.



வெற்றி பெற்றவர்களுக்கு யோகா குரு சுவாமி தேஜாமயானந்தா பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...