கோவையில் பழுது பார்க்க வந்த காரில் இருந்த அரிய வகை பறக்கும் பாம்பு - வனத்துறையிடம் ஒப்படைப்பு!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கார் சர்வீஸ் சென்டருக்கு பழுது பார்ப்பதற்காக கொண்டு வந்து விடப்பட்ட காரில் இருந்து அரிய வகை பாம்பான பறக்கும் பாம்பு மீட்கப்பட்டு பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே பழுது பார்க்க வந்த காரில் இருந்து அரியவகை பறக்கும் பாம்பு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் கார் சர்வீஸ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சர்வீஸ் சென்டருக்கு கார் ஒன்று பழுது பார்ப்பதற்காக கொண்டு வந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊழியர்கள் அந்த காரில் பழுது பார்க்க சென்ற போது அதில் சிறிய அளவிலான பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள பாம்புகள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த ரதீஸ் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த ரதீஷ், காரில் இருந்த பாம்பை பத்திரமாக மீட்டார். பிடிபட்ட பாம்பு பறக்கும் பாம்பு என அறியப்படும் விஷத்தன்மையுள்ள பாம்பாகும்.

இந்த பாம்புகள் பச்சை நிறத்தில் கருப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிற குறுக்கு கோடுகளுடன் காணப்படுகிறது. ஆனால் இதன் விஷத்தன்மை மனிதர்களை பாதிக்காது என்றும், பறவைகள் மற்றும் சிறு பூச்சியினங்களை உண்பதற்கு மட்டுமே இதன் விஷம் பயன்படும் எனவும் கூறப்படுகிறது.

இவ்வகை பாம்புகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகளவில் காணப்படும். உயரமான கிளையிலிருந்து கீழே குதிக்கும் திறமையும், ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு தாவும் திறமையும் கொண்டதன் காரணமாகவே இவ்வகை பாம்புகள் பறக்கும் பாம்பு என அழைக்கப்படுகிறது.

காரின் உரிமையாளர் ஆனைக்கட்டி வனப்பகுதி அருகே சுற்றுலா சென்று திரும்பிய நிலையில், மரத்தில் இருந்து காரில் தவறி விழுந்திருக்கலாம் என பாம்புகள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பிடிபட்ட பறக்கும் பாம்பு மாவட்ட வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...