ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யக்கோரி நீலகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு ஆர்ப்பாட்டம்

நகராட்சி, மின்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணிநிரந்தரம் கோரி கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி தொடர்ந்து தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.



இந்நிலையில் நீலகிரி மாவட்ட சிஐடியு சார்பாக உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மின்துறை, நகராட்சி, டாஸ்மாக் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய கோரி முழக்கங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், நீலகிரி மாவட்டத்தை சார்ந்த சிஐடியு நிர்வாகிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...