ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குசாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கான முதல்கட்ட பயிற்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தும் முறை உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவிற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் போது வாக்குச்சாவடியில் உள்ள பணியாளர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.



ஈரோடு மாவட்டம் ரங்கம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. மொத்தம் 238 வாக்கு சாவடிகளில் பணியமர்த்தப்பட உள்ள 1206 அலுவலர்கள் இந்த முதல்கட்ட பயிற்சியில் பங்கேற்றனர்.



இதில் EVM இயந்திரம் கையாளுதல், வாக்கு சாவடிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 4 பேர் பணியில் ஈடுபடுவர், கூடுதல் வாக்காளர்கள் உள்ள 52 பூத்களில் மட்டும் கூடுதலாக ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் இதே போல் மொத்தம் 4 கட்ட பயிற்சிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...