கோவை அருகே கஞ்சா சாக்லேட் கடத்திய வடமாநில வாலிபர் கைது!

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சோமனூர் சுற்றுவட்டாரப் பகுதியில் வட மாநில நபர்கள் மூலமாகக் கஞ்சா சாக்லேட்டுகள் அதிக அளவில் விற்கப்படுவதாகக் கோவை மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்நிலையில் உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அவர் கொண்டு வந்த பையில் கஞ்சா சாக்லேட் பாக்கெட்டுகளும், கஞ்சா பொட்டலமும் இருந்தது. அதைப் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், வாலிபரிடம் விசாரித்த போது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் (33) என்பதும், பீகார் மாநிலத்திலிருந்து கஞ்சா சாக்லேட்டுகளை மொத்தமாக வாங்கி வந்து, கோவையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யக் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

தனிப்படை போலீசார் கைதான மகேஷ்குமாரை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கருமத்தம்பட்டி போலீசார் வட மாநில நபர் மீது வழக்குப் பதிவு செய்து சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...