கோவை அருகே கஞ்சா சாக்லேட் கடத்திய வடமாநில வாலிபர் கைது!

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சோமனூர் சுற்றுவட்டாரப் பகுதியில் வட மாநில நபர்கள் மூலமாகக் கஞ்சா சாக்லேட்டுகள் அதிக அளவில் விற்கப்படுவதாகக் கோவை மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்நிலையில் உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அவர் கொண்டு வந்த பையில் கஞ்சா சாக்லேட் பாக்கெட்டுகளும், கஞ்சா பொட்டலமும் இருந்தது. அதைப் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், வாலிபரிடம் விசாரித்த போது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் (33) என்பதும், பீகார் மாநிலத்திலிருந்து கஞ்சா சாக்லேட்டுகளை மொத்தமாக வாங்கி வந்து, கோவையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யக் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

தனிப்படை போலீசார் கைதான மகேஷ்குமாரை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கருமத்தம்பட்டி போலீசார் வட மாநில நபர் மீது வழக்குப் பதிவு செய்து சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...