தாராபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தாராபுரத்தில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மத்திய பாஜக அரசு அதானி குடும்பத்திற்கு துணை போனதாக குற்றம்சாட்டி கோஷங்களை எழுப்பினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் தாராபுரம் அமராவதி ரவுண்டானா அருகே உள்ள எல்ஐசி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ நிறுவனங்களில் கடன் வாங்கி மோசடி செய்த அதானி குழுமத்திற்கு மத்திய பாஜக அரசு துணை போவதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஹின்டென்பர்க் ஆராய்ச்சி அறிக்கை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது கூட்டு நாடாளுமன்ற குழுவின் கீழ் பாரபட்சமற்ற விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்தினர்.



மேலும், எல்.ஐ. சி. மற்றும் எஸ். பி.ஐ. உள்ளிட்ட பிற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அதானி குழுமத்தில் மத்திய அரசு முதலீடு செய்ய நிர்பந்தித்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.

எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ. வங்கியில் முதலீடு செய்த ஏழை பாதிக்க கூடாது, முதலீட்டாளர்களை பாதுகாக்க மத்திய அரசு சரியான தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...