வட இந்தியர்கள் வருகையை தடுக்க கோரி கட்டிடத் தொழிலாளி மகள் எழுதிய கவிதையுடன் ஆட்சியரிடம் மனு

கோவையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பாலமுருகன் என்பவர் வட இந்தியர்களின் அராஜகத்தை ஒடுக்கக் கோரி மகள் எழுதிய கவிதையுடன், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி-யிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.



கோவை: கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். கட்டிடத் தொழிலாளியான இவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், தான் வட இந்தியர்களால் வேலையின்றி தவிப்பதாகவும், கட்டிடத் தொழிலில் வட இந்தியர்கள் ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்.



மேலும் இதேபோல் வட இந்தியர்களின் ஆதிக்கம் நீடிக்கும் நிலையில் இது தமிழ்நாட்டுக்குப் பேராபத்து எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த மனுவில், தனது மகள் எழுதிய கவிதை தொகுப்பையும் இணைத்துள்ளார்.

'பேனா,பென்சிலுக்கும் சண்டையிடும் அரசியல்வாதிகளுக்கும், விஜயா? அஜித்தா? என சண்டையிடும் ரசிகர் பெருமக்களுக்கும் ஒரு முக்கியமான வேண்டுகோள்...அழிந்து வரும் தமிழகத்தையும், எனது தமிழ் மண்ணையும் மீட்டெடுப்போம்.. வட இந்தியர்களிடமிருந்து என்னை போன்றவர்களையும், நமது வருங்காலத்தையும் போற்றி பாதுகாப்போம், போராடுவோம் தமிழகத்தை மீட்கும் வரை' இப்படிக்கு தமிழனின் ஒருவர் தமிழ் மதி என அந்த கவிதை தொகுப்பு முடிகிறது.



எங்கள் பிள்ளைகள், வட இந்தியர்களுக்கு அடிமையாகி விட கூடாது என்று ஆதங்கப்படும் பாலமுருகன், தனது கோரிக்கை மனுவால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...