வட இந்தியர்கள் வருகையை தடுக்க கோரி கட்டிடத் தொழிலாளி மகள் எழுதிய கவிதையுடன் ஆட்சியரிடம் மனு

கோவையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பாலமுருகன் என்பவர் வட இந்தியர்களின் அராஜகத்தை ஒடுக்கக் கோரி மகள் எழுதிய கவிதையுடன், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி-யிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.



கோவை: கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். கட்டிடத் தொழிலாளியான இவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், தான் வட இந்தியர்களால் வேலையின்றி தவிப்பதாகவும், கட்டிடத் தொழிலில் வட இந்தியர்கள் ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்.



மேலும் இதேபோல் வட இந்தியர்களின் ஆதிக்கம் நீடிக்கும் நிலையில் இது தமிழ்நாட்டுக்குப் பேராபத்து எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த மனுவில், தனது மகள் எழுதிய கவிதை தொகுப்பையும் இணைத்துள்ளார்.

'பேனா,பென்சிலுக்கும் சண்டையிடும் அரசியல்வாதிகளுக்கும், விஜயா? அஜித்தா? என சண்டையிடும் ரசிகர் பெருமக்களுக்கும் ஒரு முக்கியமான வேண்டுகோள்...அழிந்து வரும் தமிழகத்தையும், எனது தமிழ் மண்ணையும் மீட்டெடுப்போம்.. வட இந்தியர்களிடமிருந்து என்னை போன்றவர்களையும், நமது வருங்காலத்தையும் போற்றி பாதுகாப்போம், போராடுவோம் தமிழகத்தை மீட்கும் வரை' இப்படிக்கு தமிழனின் ஒருவர் தமிழ் மதி என அந்த கவிதை தொகுப்பு முடிகிறது.



எங்கள் பிள்ளைகள், வட இந்தியர்களுக்கு அடிமையாகி விட கூடாது என்று ஆதங்கப்படும் பாலமுருகன், தனது கோரிக்கை மனுவால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...