கோவை வாலாங்குளத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கோவை கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்த இளைஞரிடம், புகைப்பிடிப்பதை விடும்படி குடும்பத்தினர் கண்டித்தால் வாலாங்குளத்தில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். அவரது சடலம் மீட்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


கோவை: கோவை வாலாங்குளத்தில் இறந்த நிலையில், மீட்கப்பட்ட இளைஞரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை அடுத்த கரும்புக்கடை ஆசாத் நகர் 4ஆவது வீதியைச் சேர்ந்தவர் சலீம் (52), இவரது மகன் முகமது ஹனிபா (29) காய்கறி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், முகமது ஹனிபா மன உளைச்சல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் புகைபிடிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டதாக தெரிகிறது.

இதையறிந்த தந்தை சலீம் புகை பிடிக்கக்கூடாது என கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த முகமது ஹனிபா கடந்த 3ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் தந்தை சலீம் மகனை காணவில்லை என ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த அடையாளம் தெரியாத இறந்த உடல்கள் உள்ள கோவை அரசு மருத்துவமனை பிரேத அறையில் ஆய்வு செய்தனர்.

அப்போது அதில் முகமது ஹனிபா உடல் இருந்தது தெரியவந்தது. மேலும் கடந்த நான்காம் தேதி அவர் வாலாங்குளத்தில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முழுமையான விசாரணைக்கு பின் முகமது ஹனிபாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...