கோவை வாலாங்குளத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கோவை கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்த இளைஞரிடம், புகைப்பிடிப்பதை விடும்படி குடும்பத்தினர் கண்டித்தால் வாலாங்குளத்தில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். அவரது சடலம் மீட்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


கோவை: கோவை வாலாங்குளத்தில் இறந்த நிலையில், மீட்கப்பட்ட இளைஞரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை அடுத்த கரும்புக்கடை ஆசாத் நகர் 4ஆவது வீதியைச் சேர்ந்தவர் சலீம் (52), இவரது மகன் முகமது ஹனிபா (29) காய்கறி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், முகமது ஹனிபா மன உளைச்சல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் புகைபிடிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டதாக தெரிகிறது.

இதையறிந்த தந்தை சலீம் புகை பிடிக்கக்கூடாது என கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த முகமது ஹனிபா கடந்த 3ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் தந்தை சலீம் மகனை காணவில்லை என ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த அடையாளம் தெரியாத இறந்த உடல்கள் உள்ள கோவை அரசு மருத்துவமனை பிரேத அறையில் ஆய்வு செய்தனர்.

அப்போது அதில் முகமது ஹனிபா உடல் இருந்தது தெரியவந்தது. மேலும் கடந்த நான்காம் தேதி அவர் வாலாங்குளத்தில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முழுமையான விசாரணைக்கு பின் முகமது ஹனிபாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...