ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் குண்டம் திருவிழா..! - தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நடைபெற்ற குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.



கோவை: பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில் தமிழகத்தின் பிரச்சித்திபெற்ற கோயில்களில் முக்கியமானது. இந்தக் கோயிலில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா மாசாணி அம்மன் கோயில் முன்பு உள்ள ராஜகோபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த பத்து நாட்களாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான கடந்த மூன்றாம் தேதி மயான பூஜையும், நேற்று இரவு அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கோவிலின் அருகே உள்ள மைதானத்தில் நேற்று இரவு குண்டம் வளர்க்கப்பட்டது.



இதையடுத்து, இன்று 47 அடி நீளம் உள்ள தீக்குண்டத்தில் முன்னதாக கோயிலின் அருளாளி பூப்பந்து உருட்டி முதலில் தீ மிதித்து குண்டம் இறங்கினார்.



அதனைத் விரதம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.



பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த குண்டம் திருவிழாவை காண உள்ளூர் மட்டுமின்றி கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆனைமலையில் குவிந்திருந்தனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...