ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் குண்டம் திருவிழா..! - தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நடைபெற்ற குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.



கோவை: பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில் தமிழகத்தின் பிரச்சித்திபெற்ற கோயில்களில் முக்கியமானது. இந்தக் கோயிலில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா மாசாணி அம்மன் கோயில் முன்பு உள்ள ராஜகோபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த பத்து நாட்களாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான கடந்த மூன்றாம் தேதி மயான பூஜையும், நேற்று இரவு அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கோவிலின் அருகே உள்ள மைதானத்தில் நேற்று இரவு குண்டம் வளர்க்கப்பட்டது.



இதையடுத்து, இன்று 47 அடி நீளம் உள்ள தீக்குண்டத்தில் முன்னதாக கோயிலின் அருளாளி பூப்பந்து உருட்டி முதலில் தீ மிதித்து குண்டம் இறங்கினார்.



அதனைத் விரதம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.



பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த குண்டம் திருவிழாவை காண உள்ளூர் மட்டுமின்றி கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆனைமலையில் குவிந்திருந்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...