ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் குண்டம் திருவிழா..! - தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நடைபெற்ற குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.



கோவை: பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில் தமிழகத்தின் பிரச்சித்திபெற்ற கோயில்களில் முக்கியமானது. இந்தக் கோயிலில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா மாசாணி அம்மன் கோயில் முன்பு உள்ள ராஜகோபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த பத்து நாட்களாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான கடந்த மூன்றாம் தேதி மயான பூஜையும், நேற்று இரவு அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கோவிலின் அருகே உள்ள மைதானத்தில் நேற்று இரவு குண்டம் வளர்க்கப்பட்டது.



இதையடுத்து, இன்று 47 அடி நீளம் உள்ள தீக்குண்டத்தில் முன்னதாக கோயிலின் அருளாளி பூப்பந்து உருட்டி முதலில் தீ மிதித்து குண்டம் இறங்கினார்.



அதனைத் விரதம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.



பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த குண்டம் திருவிழாவை காண உள்ளூர் மட்டுமின்றி கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆனைமலையில் குவிந்திருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...