ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் - பறக்கும்படை தீவிர வாகனத் தணிக்கை!

ஈரோடு கிழக்கு சட்மன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட 18ஆம் தேதி முதல் ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்த நிலையில் 3 பறக்கும் படை மற்றும் 4 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையிலே 4 நிரந்தர சோதனை சாவடி மற்றும் 35 தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசாரும் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 350 போலீசார் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளியூரிலிருந்து வரும் வாகனங்களின் பதிவு எண்கள், ரிஜிஸ்டரில் பதிவு செய்யப்பட்ட பிறகே தொகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

முக்கியமாக, பன்னீர்செல்வம் பார்க், அக்ரஹாரம், மூலப்பட்டறை, சூளை, சக்திரோடு, வீரம்ப்பம் பாளையம், குமலன் குட்டை, கருங்கல்பாளையம் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களில் வருபவர்களின் உடமைகளும் சோதனையிடப்படுகின்றன.

தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்கவும் தேர்தல் விதிகளை கண்காணிக்கவும் தீவிர வாகன தணிக்கை செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இடைத்தேர்தல்களில் பெரும்பாலும் பணம் பட்டுவாடா தலைவிரித்தாடும் என்பதனால் பறக்கும் படையினரின் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...