நாராயணசாமி நாயுடுவின் 99வது பிறந்தநாள் விழா - கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி மலர் மரியாதை!

தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் நாராயணசாமி நாயுடுவின் 99வது பிறந்தநாளையொட்டி, கோவை அருகே வையம்பாளையத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே வையம்பாளையத்தில் தமிழக விவசாயிகள் சங்க நிறுவனர் நாராயணசாமி நாயுடுவின் 99வது பிறந்தநாள் விழா அவருடைய மணிமண்டபத்தில் அரசு விழாவாக நடைபெற்றது.



இதில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று நாராயணசாமி நாயுடுவின் திரு உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



இந்த நிகழ்ச்சியின்போது, நாராயணசாமி நாயுடுவின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லத்தை நூலகமாக மாற்ற வேண்டும் மற்றும் மணிமண்டபத்தின் நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:



விவசாயிகளின் விடிவெள்ளியாக திகழ்ந்த விவசாயப் பெருமக்களின் தோழனாக அவர்களுடைய கோரிக்கைக்கு முன் நின்று போராடிய நாராயணசாமி நாயுடுவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அரசு விழாவாக கொண்டாடியுள்ளோம்.

பல்வேறு விவசாய திட்டங்கள் கொண்டு வருவதற்கு முன்னோடியாக திகழ்ந்த அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்தப் பகுதியில் அவரது மணிமண்டபத்தில் நுழைவாயில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்கள். அவர் வாழ்ந்த இல்லத்தை நூலகமாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர்.

முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். வருகிற ஆண்டு நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு, அனைத்து விவசாய தரப்பினரையும் சென்றடையும் வகையில், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு முதல்வரிடம் தெரிவித்து இதை சிறப்பாக கொண்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவையை பொறுத்தவரை விவசாயிகளின் உந்து சக்தியாக இருந்து, இலவச மின்சாரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வென்றெடுக்க முன்நின்றவர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்". இவ்வாறு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.



இந்த நிகழ்ச்சியில் கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், மாவட்ட துணை செயலாளர் அசோக் பாபு, மாவட்ட கவுன்சிலர் அபிநயா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி, நாராயணசாமி நாயுடுவின் குடும்பத்தார், கோவை தெற்கு ஆர்டிஓ பண்டரிநாதன், அன்னூர் தாசில்தார் தங்கராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...