லிங்கபைரவியில்‌ தைப்பூச திருவிழா கோலாகலம்‌ - ஏராளமான பெண்கள் பங்கேற்பு

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்கபைரவியில்‌ தைப்பூச திருவிழா கோலாகலம்‌ நூற்றுக்கணக்கான பெண்கள்‌ முளைப்பாரி யாத்திரை.


கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்கபைரவியில் தைப்பூசத் திருவிழா இன்று மிக கோலாகலமாக நடைபெற்றது. கள்ளிப்பாளையத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலவாக வந்து தேவியின் அருளை பெற்றனர்.

கோவை ஈஷாவில்‌ உள்ள லிங்கபைரவியில்‌ தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.



நூற்றுக்கணக்கான பெண்‌ பத்தர்கள்‌ கள்ளிப்பாளையத்தில் இருந்து முளைப்பாரிகளை தலையில்‌ ஏந்தி லிங்கபைரவிக்கு பாத யாத்திரையாக வந்து தரிசனம்‌ செய்தனர்‌.

இந்த யாத்திரையில்‌, உள்ளூர்‌ கிராம மக்கள்‌ மட்டுமின்றி, வெளியூர்‌ மற்றும்‌ வெளிநாட்டைச்‌ சேர்ந்த பக்தர்களும்‌ ஜாதி, மத பாகுபாடு இன்றி கலந்து கொண்டனர்‌.



ஆண்கள்‌ கரகம்‌ ஏந்தி முன்‌ செல்ல அவர்களை தொடர்ந்து முளைப்பாரியிலேயே லிங்கபைரவி தேவியின்‌ உருவம்‌ வடிவமைக்கப்பட்ட தேர்‌ ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.



ஆலாந்துறையை அடுத்த கள்ளிப்பாளையத்தில்‌ இருந்து காலை 6.30 மணி புறப்பட்ட இந்த யாத்திரை நண்பகல்‌ 12 மணியளவில்‌ லிங்கபைரவியை வந்தடைந்தது.



வரும்‌ வழியில்‌ ஆலாந்துறை, மத்வராயபுரம்‌, இருட்டுப்பள்ளம்‌, செம்மேடு என பல்வேறு இடங்களில்‌ அங்குள்ள கிராம மக்கள்‌ சிறப்பான வரவேற்பு அளித்தனர்‌.



இது தவிர, தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச்‌ சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள்‌ கடந்த 21 நாட்கள்‌ சிவாங்கா விரதம்‌ மேற்கொண்டனர்‌. அவர்கள்‌ அனைவரும்‌ இன்று லிங்கபைரவிக்கு வந்து தேங்காய்‌, தானியங்கள்‌, நெய்‌ தீபம்‌ உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து தங்களது விரதத்தை நிறைவு செய்தனர்‌.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...