லிங்கபைரவியில்‌ தைப்பூச திருவிழா கோலாகலம்‌ - ஏராளமான பெண்கள் பங்கேற்பு

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்கபைரவியில்‌ தைப்பூச திருவிழா கோலாகலம்‌ நூற்றுக்கணக்கான பெண்கள்‌ முளைப்பாரி யாத்திரை.


கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்கபைரவியில் தைப்பூசத் திருவிழா இன்று மிக கோலாகலமாக நடைபெற்றது. கள்ளிப்பாளையத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலவாக வந்து தேவியின் அருளை பெற்றனர்.

கோவை ஈஷாவில்‌ உள்ள லிங்கபைரவியில்‌ தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.



நூற்றுக்கணக்கான பெண்‌ பத்தர்கள்‌ கள்ளிப்பாளையத்தில் இருந்து முளைப்பாரிகளை தலையில்‌ ஏந்தி லிங்கபைரவிக்கு பாத யாத்திரையாக வந்து தரிசனம்‌ செய்தனர்‌.

இந்த யாத்திரையில்‌, உள்ளூர்‌ கிராம மக்கள்‌ மட்டுமின்றி, வெளியூர்‌ மற்றும்‌ வெளிநாட்டைச்‌ சேர்ந்த பக்தர்களும்‌ ஜாதி, மத பாகுபாடு இன்றி கலந்து கொண்டனர்‌.



ஆண்கள்‌ கரகம்‌ ஏந்தி முன்‌ செல்ல அவர்களை தொடர்ந்து முளைப்பாரியிலேயே லிங்கபைரவி தேவியின்‌ உருவம்‌ வடிவமைக்கப்பட்ட தேர்‌ ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.



ஆலாந்துறையை அடுத்த கள்ளிப்பாளையத்தில்‌ இருந்து காலை 6.30 மணி புறப்பட்ட இந்த யாத்திரை நண்பகல்‌ 12 மணியளவில்‌ லிங்கபைரவியை வந்தடைந்தது.



வரும்‌ வழியில்‌ ஆலாந்துறை, மத்வராயபுரம்‌, இருட்டுப்பள்ளம்‌, செம்மேடு என பல்வேறு இடங்களில்‌ அங்குள்ள கிராம மக்கள்‌ சிறப்பான வரவேற்பு அளித்தனர்‌.



இது தவிர, தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச்‌ சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள்‌ கடந்த 21 நாட்கள்‌ சிவாங்கா விரதம்‌ மேற்கொண்டனர்‌. அவர்கள்‌ அனைவரும்‌ இன்று லிங்கபைரவிக்கு வந்து தேங்காய்‌, தானியங்கள்‌, நெய்‌ தீபம்‌ உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து தங்களது விரதத்தை நிறைவு செய்தனர்‌.

Newsletter

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...