தெய்வீகத்தின்‌ சன்னிதியில்‌ பாகுபாடு பார்க்க கூடாது - சத்குரு ட்வீட்‌

தெய்வீகத்தின்‌ சன்னிதியில்‌ பாகுபாடு பார்க்க கூடாது என தென்முடியனூர்‌ சம்பவம்‌ தொடர்பாக சத்குரு ட்வீட்‌.



கோவை: தெய்வீகத்தின்‌ சன்னிதியில்‌ மனிதர்களுக்கிடையே பாகுபாடு பார்ப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்‌ என சத்குரு தெரிவித்துள்ளார்‌.

திருவண்ணாமலை மாவட்டம்‌ தென்முடியனூர்‌ கிராமத்தில்‌ உள்ள முத்துமாரியம்மன்‌ கோவிலுக்குள்‌ தலித்‌ மக்கள்‌ செல்ல கடந்த 80 ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல்‌ இருந்தது. இதையடுத்து, அந்தப்‌ பகுதியை சேர்ந்த தலித்‌ மக்கள்‌ மாவட்ட ஆட்சிரியரிடம்‌ இது குறித்து புகார்‌ அளித்தனர்‌.

இதை தொடர்ந்து கடந்த வாரம்‌ திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ காவல்துறை அதிகாரிகளின்‌ முன்னிலையில்‌ தலித்‌ மக்கள்‌ 80 ஆண்டுகளுக்கு பிறகு முதல்‌ முறையாக முத்துமாரியம்மன்‌ கோவிலுக்குள்‌ நுழைந்து வழிபாடு செய்தனர்‌.

இச்சம்பவம்‌ தொடர்பாக சத்குரு அவர்கள்‌ தனது ட்விட்டர்‌ பக்கத்தில்‌ வெளியிட்டுள்ள பதிவில்‌, “தெய்வீகமும்‌ பாகுபாடும்‌ ஒன்றாக இருக்க முடியாதவை. தெய்வீகத்தின்‌ சன்னிதியில்‌ மனிதர்களுக்கிடையே நாம்‌ பிரித்துப்‌ பார்ப்பதே வெட்கப்பட வேண்டிய விஷயம்‌. யார்‌ தலீத்‌ யார்‌ இல்லை என்று நாம்‌ யோசிக்கவே கூடாது. தென்முடியனூருக்கு வாழ்த்துக்கள்‌” என தெரிவித்துள்ளார்‌.



ஈஷாவில்‌ உள்ள தியானலிங்கம்‌ மற்றும்‌ லிங்க பைரவியில்‌ துவக்கம்‌ முதலே அனைத்து தரப்பு மக்களும்‌ எந்த வித பாகுபாடின்றி அனுமதிக்கப்படுகின்றனர்‌. மேலும்‌ அமாவாசை, பவுர்ணமி நாட்களில்‌ யார்‌ வேண்டுமானாலும்‌ தியானலிங்கத்திற்கு பால்‌ மற்றும்‌ தண்ணீர்‌ அபிஷேகம்‌ செய்யும்‌ வாய்ப்பும்‌ வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...