தெய்வீகத்தின்‌ சன்னிதியில்‌ பாகுபாடு பார்க்க கூடாது - சத்குரு ட்வீட்‌

தெய்வீகத்தின்‌ சன்னிதியில்‌ பாகுபாடு பார்க்க கூடாது என தென்முடியனூர்‌ சம்பவம்‌ தொடர்பாக சத்குரு ட்வீட்‌.



கோவை: தெய்வீகத்தின்‌ சன்னிதியில்‌ மனிதர்களுக்கிடையே பாகுபாடு பார்ப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்‌ என சத்குரு தெரிவித்துள்ளார்‌.

திருவண்ணாமலை மாவட்டம்‌ தென்முடியனூர்‌ கிராமத்தில்‌ உள்ள முத்துமாரியம்மன்‌ கோவிலுக்குள்‌ தலித்‌ மக்கள்‌ செல்ல கடந்த 80 ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல்‌ இருந்தது. இதையடுத்து, அந்தப்‌ பகுதியை சேர்ந்த தலித்‌ மக்கள்‌ மாவட்ட ஆட்சிரியரிடம்‌ இது குறித்து புகார்‌ அளித்தனர்‌.

இதை தொடர்ந்து கடந்த வாரம்‌ திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ காவல்துறை அதிகாரிகளின்‌ முன்னிலையில்‌ தலித்‌ மக்கள்‌ 80 ஆண்டுகளுக்கு பிறகு முதல்‌ முறையாக முத்துமாரியம்மன்‌ கோவிலுக்குள்‌ நுழைந்து வழிபாடு செய்தனர்‌.

இச்சம்பவம்‌ தொடர்பாக சத்குரு அவர்கள்‌ தனது ட்விட்டர்‌ பக்கத்தில்‌ வெளியிட்டுள்ள பதிவில்‌, “தெய்வீகமும்‌ பாகுபாடும்‌ ஒன்றாக இருக்க முடியாதவை. தெய்வீகத்தின்‌ சன்னிதியில்‌ மனிதர்களுக்கிடையே நாம்‌ பிரித்துப்‌ பார்ப்பதே வெட்கப்பட வேண்டிய விஷயம்‌. யார்‌ தலீத்‌ யார்‌ இல்லை என்று நாம்‌ யோசிக்கவே கூடாது. தென்முடியனூருக்கு வாழ்த்துக்கள்‌” என தெரிவித்துள்ளார்‌.



ஈஷாவில்‌ உள்ள தியானலிங்கம்‌ மற்றும்‌ லிங்க பைரவியில்‌ துவக்கம்‌ முதலே அனைத்து தரப்பு மக்களும்‌ எந்த வித பாகுபாடின்றி அனுமதிக்கப்படுகின்றனர்‌. மேலும்‌ அமாவாசை, பவுர்ணமி நாட்களில்‌ யார்‌ வேண்டுமானாலும்‌ தியானலிங்கத்திற்கு பால்‌ மற்றும்‌ தண்ணீர்‌ அபிஷேகம்‌ செய்யும்‌ வாய்ப்பும்‌ வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...