மேட்டுப்பாளையம் அருகே மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - ஒருவர் படுகாயம்!

மேட்டுப்பாளையம் சாலை ஏ.வி.பி.பள்ளி அருகே சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் பின்னால் அமர்ந்திருந்த தர்ஷன் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், மின்கம்பம் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் சுதர்சன், இவரும் இவரது நண்பர் தர்சன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளனர்.

இந்த நிலையில் ஏ.வி.பி.பள்ளி அருகே வந்தபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த தர்சன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து விபத்து குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...