மேட்டுப்பாளையத்தில் சாப்பிட்ட உணவுக்கு காசு கேட்ட தள்ளுவண்டி கடைக்காரர் - கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் சாப்பிட்ட உணவுக்கு காசு கேட்ட தள்ளுவண்டி கடைக்காரரை பட்டா கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது31). இவர் காரமடை பேருந்து நிலையம் அருகே தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவரது கடைக்கு கடந்த வாரம் பாக்கியராஜ் என்பவர் வந்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக செந்தில்குமார் மற்றும் பாக்கியராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், நேற்று செந்தில்குமார் கடையை கவனித்துகொண்டு இருந்தபோது காரமடை பகுதியை சேர்ந்த கோகுல் கிருஷ்ணன் (வயது 22), காரமடை மரியபுரம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்கிற ஞானராஜ் (வயது27), மரியபுரம் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் (வயது47) ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் செந்தில் குமார் கடைக்கு வந்துள்ளனர். அப்போது, செந்தில்குமாரை வம்புக்கு இழுத்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.



மேலும், அவரிடம் பட்டா கத்தியை காட்டி யாரிடம் காசு கேட்கிறாய் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த செந்தில்குமார் இதுகுறித்து காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் காரமடை காவல் ஆய்வாளர் குமார், உதவி ஆய்வாளர் சுல்தான் இப்ராகிம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...