வால்பாறை அருகே 2 வீடுகள், பம்ப்செட்டை உடைத்து சேதப்படுத்திய யானைகள் - மக்கள் அச்சம்..!

வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட் பகுதியில் 2 வீடுகளின் ஜன்னல், கதவுகளை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள் அங்கிருந்த பம்ப்செட் கட்டிடத்தையும் தாக்கி சேதப்படுத்தியது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள் 2 வீடுகள் மற்றும் பம்ப்செட் கட்டிடத்தை தாக்கி சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வால்பாறை அருகேயுள்ள பச்சைமலை எஸ்டேட் பகுதியில் நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 14 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்துள்ளன.



இதனிடையே அந்த யானைகள், அப்பகுதியை சேர்ந்த பிரபாகரன் மற்றும் ராமதாஸ் ஆகியோரது வீடுகளின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.



இதனை கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு சத்தம் போட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர்.



இந்நிலையில், அங்கிருந்து சென்ற காட்டு யானைகள் அருகில் இருந்த குடிநீர் பம்ப்செட் கட்டிடம் மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்து முழுமையாக சேதப்படுத்தி உள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.

காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்கள், காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிகளுக்கு விரட்ட வேண்டும் என்றும், குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...