நீலகிரியில் பழங்குடியினப் பெண்ணை அடித்துக்கொன்ற புலி - 15 நவீன தானியங்கி கேமராக்களுடன் தீவிர கண்காணிப்பு!

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் பழங்குடியின பெண்ணை அடித்துக் கொன்ற புலியை 15 நவீன தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் மைய பகுதியில் உள்ள தெப்பக்காட்டில் நேற்று முன்தினம் இரவு 50 வயது மதிக்கத்தக்க மாரி என்ற பழங்குடியின பெண்ணை புலி ஒன்று அடித்து கொன்றது. புதருக்குள் பெண்ணின் உடலை இழுத்து சென்ற புலி, அவரது கை மற்றும் கால்களை சாப்பிட்டுவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.



இதனையடுத்து, மாரியின் உடல் நேற்று காலை மீட்கப்பட்டு, உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் என தெப்பக்காடு பகுதியைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் புலியை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததுடன் உயிரிழந்த மாறியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என அறிவித்தனர். இதனை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.



இந்த நிலையில் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 15 இடங்களில் நவீன கேமராக்களை வனத்துறையினர் பொருத்தி உள்ளனர்.



அதில், பதிவாகும் புலியின் புகைப்படங்களை வைத்து எந்த புலி, ஆட்கொல்லி புலியாக மாறி உள்ளது என்பதை உறுதி செய்த பின்னர் அதை பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...