கோவையில் வீட்டின் முன்பு நிறுத்திய இருசக்கர வாகனம் மாயம் - போலீசார் விசாரணை

துடியலூர் அடுத்த வடமதுரை பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்திருந்த இருசக்கர வாகனம் மாயமான புகாரின் அடிப்படையில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த வடமதுரை வி.எஸ்.கே நகர் பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. இவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த டியோ இருசக்கர வாகனம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து பெரியசாமி துடியலூர் காவல் நிலையத்தில் தனது டியோ இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துடியலூர் போலீசார் காணாமல் போன இருசக்கர வாகனத்தை தேடி வருகின்றனர்.

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...