உடுமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமில், 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடைந்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



உடுமலைப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளிகல்வித் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.



இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், பிறப்பு மற்றும் 18 வயது உடைய குழந்தைகளுக்கு உதவி செய்தல், உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.



இதேபோல், கடுமையாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மாத பராமரிப்பு தொகை பெற பரிந்துரை செய்வது, மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பதிவு செய்தல், கண் மருத்துவம், குழந்தைகள் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகை மருத்துவமும் பார்க்கப்பட்டன.

இந்த முகாமில் அனைத்து வகை மருத்துவர்களும் முகாமுக்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்து, ஆலோசனைகளையும் வழங்கினர்.

இந்த மருத்துவ முகாமில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...