உடுமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமில், 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடைந்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



உடுமலைப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளிகல்வித் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.



இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், பிறப்பு மற்றும் 18 வயது உடைய குழந்தைகளுக்கு உதவி செய்தல், உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.



இதேபோல், கடுமையாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மாத பராமரிப்பு தொகை பெற பரிந்துரை செய்வது, மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பதிவு செய்தல், கண் மருத்துவம், குழந்தைகள் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகை மருத்துவமும் பார்க்கப்பட்டன.

இந்த முகாமில் அனைத்து வகை மருத்துவர்களும் முகாமுக்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்து, ஆலோசனைகளையும் வழங்கினர்.

இந்த மருத்துவ முகாமில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...