பொள்ளாச்சி பாலாற்றங்கரை ஆஞ்சநேய கோவில் கும்பாபிஷேக விழா - பக்தர்கள் தரிசனம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நகராட்சிக் கூட்டம் நகரமன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் நகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இக்கோவிலின் சிறப்பு அம்சமாக ஆஞ்சநேயர் ஒரே கருவறையில் மூலவர் சமதள பரப்பில் இருப்பதும் நின்ற கோலத்தில் மூர்த்தியாக இருப்பதும் தமிழகத்தில் இங்கு மட்டும்தான் இருப்பது என்பது சிறப்பு அம்சமாக சொல்லப்படுகிறது.

இந்த கோவில் கும்பாபிஷேகம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மங்கல இசையுடன் நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து நடைபெற்றது.



இதில், கும்பம் எழுந்தருளி திருக்கோவிலில் பவனி வந்து பின்னர் ராஜகோபுரம் ஆஞ்சநேயர் மூலவர் கோபுரம் ராமர் பாத கோபுரம், மற்றும் விநாயகர் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.



இந்த கும்பாபிஷேக விழாவில் ஆனைமலை பொள்ளாச்சி கோவை, உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...