பொள்ளாச்சி பாலாற்றங்கரை ஆஞ்சநேய கோவில் கும்பாபிஷேக விழா - பக்தர்கள் தரிசனம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நகராட்சிக் கூட்டம் நகரமன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் நகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இக்கோவிலின் சிறப்பு அம்சமாக ஆஞ்சநேயர் ஒரே கருவறையில் மூலவர் சமதள பரப்பில் இருப்பதும் நின்ற கோலத்தில் மூர்த்தியாக இருப்பதும் தமிழகத்தில் இங்கு மட்டும்தான் இருப்பது என்பது சிறப்பு அம்சமாக சொல்லப்படுகிறது.

இந்த கோவில் கும்பாபிஷேகம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மங்கல இசையுடன் நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து நடைபெற்றது.



இதில், கும்பம் எழுந்தருளி திருக்கோவிலில் பவனி வந்து பின்னர் ராஜகோபுரம் ஆஞ்சநேயர் மூலவர் கோபுரம் ராமர் பாத கோபுரம், மற்றும் விநாயகர் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.



இந்த கும்பாபிஷேக விழாவில் ஆனைமலை பொள்ளாச்சி கோவை, உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...