பொள்ளாச்சி நகராட்சிக் கூட்டம் - 47 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நகராட்சிக் கூட்டம் நகரமன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் நகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி கூட்ட அரங்கில் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகராட்சிக்க கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பொது சுகாதாரம் சார்பில் சுகாதார சீர்கேடு மற்றும் கசடுகள் அடைப்பு குறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்க அவசர கால தொடர்பு எண் (toll free number) 14420 உருவாக்கம் செய்வது உள்ளிட்ட 47 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.



இந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளையும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் பேசினர். கவுன்சிலர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தக் கூட்டத்தில் நகராட்சி தலைவர் உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகராட்சிக்கு குடிநீர் தேவைக்கு சுத்திகரிக்கப்படும் குடிநீர், மழைக்காலங்களில் உப்பாற்றில் தண்ணீர் எடுக்கும்பொழுது நுகர்வுத் தன்மை மாறிவருவதால் அந்த இடத்தில் இருந்து தண்ணீர் சுத்திகரிக்கும் பம்ப் ஆழியார் அணையையொட்டி அமைப்பதற்கு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...