பொள்ளாச்சி நகராட்சிக் கூட்டம் - 47 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நகராட்சிக் கூட்டம் நகரமன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் நகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி கூட்ட அரங்கில் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகராட்சிக்க கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பொது சுகாதாரம் சார்பில் சுகாதார சீர்கேடு மற்றும் கசடுகள் அடைப்பு குறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்க அவசர கால தொடர்பு எண் (toll free number) 14420 உருவாக்கம் செய்வது உள்ளிட்ட 47 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.



இந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளையும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் பேசினர். கவுன்சிலர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தக் கூட்டத்தில் நகராட்சி தலைவர் உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகராட்சிக்கு குடிநீர் தேவைக்கு சுத்திகரிக்கப்படும் குடிநீர், மழைக்காலங்களில் உப்பாற்றில் தண்ணீர் எடுக்கும்பொழுது நுகர்வுத் தன்மை மாறிவருவதால் அந்த இடத்தில் இருந்து தண்ணீர் சுத்திகரிக்கும் பம்ப் ஆழியார் அணையையொட்டி அமைப்பதற்கு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...